search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    மரக்காணம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

    கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியாக வராததை கண்டித்து பல தடவை மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை.
    மரக்காணம்:

    மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சியில்  உள்ள பிளாரி மேட்டுப் பகுதியில்  200-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் அனைவரும் விவசாயிகள். இப்பகுதியில் தினந்தோறும் குடிநீர் தொட்டியில் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருவது வழக்கம்.

    கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியாக வராததை கண்டித்து பல தடவை மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை 8 மணியளவில் கந்தாடு பஸ் நிறுத்தம் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திண்டிவனம்-மரக்காணம் செல்லும்  சாலை மறியலில ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த மரக்காணம் பேலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமைக் காவலர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அமர்ந்திருந்தவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவர்கள் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால்  திண்டிவனம் செல்லும் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×