என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மரக்காணம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
Byமாலை மலர்2 Jun 2022 11:15 AM GMT (Updated: 2 Jun 2022 11:15 AM GMT)
கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியாக வராததை கண்டித்து பல தடவை மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை.
மரக்காணம்:
மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சியில் உள்ள பிளாரி மேட்டுப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் அனைவரும் விவசாயிகள். இப்பகுதியில் தினந்தோறும் குடிநீர் தொட்டியில் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருவது வழக்கம்.
கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியாக வராததை கண்டித்து பல தடவை மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை 8 மணியளவில் கந்தாடு பஸ் நிறுத்தம் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திண்டிவனம்-மரக்காணம் செல்லும் சாலை மறியலில ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மரக்காணம் பேலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமைக் காவலர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அமர்ந்திருந்தவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் திண்டிவனம் செல்லும் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சியில் உள்ள பிளாரி மேட்டுப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் அனைவரும் விவசாயிகள். இப்பகுதியில் தினந்தோறும் குடிநீர் தொட்டியில் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருவது வழக்கம்.
கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியாக வராததை கண்டித்து பல தடவை மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை 8 மணியளவில் கந்தாடு பஸ் நிறுத்தம் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திண்டிவனம்-மரக்காணம் செல்லும் சாலை மறியலில ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மரக்காணம் பேலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமைக் காவலர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அமர்ந்திருந்தவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர். பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் திண்டிவனம் செல்லும் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X