என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் மனு
Byமாலை மலர்28 May 2022 10:14 AM GMT (Updated: 28 May 2022 10:14 AM GMT)
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் விமலா தலைமையில், செயலாளர் ரோஜா, பொருளாளர் சக்தி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டரிடம் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த, 23 ந் தேதி சுண்டேகுப்பம், அகரம், ஊராட்சிகளின் துணைத்தலைவர்கள் பொய்யான புகார் மனுவை அளித்துள்ளனர். மேலும் காவேரிப்பட்டணம் ஒன்றியத்தின், 36 ஊராட்சி மன்ற தலைவர்களும் பணம் பெற்றுக் கொண்டு தான் பொதுமக்கள் பணிகளை செய்கிறார்கள் என அகரம் மற்றும் சுண்டேகுப்பம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
எனவே 36 ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது அவதூறு பரப்பிய துணைத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X