search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    அதியமான்கோட்டை அருகே கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

    அதியமான்கோட்டை அருகே கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் சரகம் கிருஷ்ணகிரி-சேலம் ரோட்டில் புறவடை பிரிவு ரோடு அருகே கனிமாத்துறை அதிகாரி மயிலன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த லாரியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி செல்வது தெரியவந்தது. 
    இந்நிலையில் அந்த லாரியை ஓட்டிவந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×