search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து விசைத்தறிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    X
    வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து விசைத்தறிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அருப்புக்கோட்டையில் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

    நூல் வாங்க முடியாமலும் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியாமலும் நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.
    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டையில் சுமார் 10 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த விசைத்தறி தொழிலை நம்பி நெசவாளர்கள் மற்றும் அதனை சார்ந்த சாயம் பூசுதல், பசை ஓட்டுதல் போன்ற தொழில்களை செய்யும் தொழிலாளர் என மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

    தற்போது தொடர்ந்து அதிகரித்துவரும் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நூல் வாங்க முடியாமலும் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியாமலும் நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.

    இந்த நிலையில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் நெசவாளர்கள் இன்று முதல் 5 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    குறிப்பாக பஞ்சு நூல் ஏற்றுமதியை உள்நாட்டுத் தேவைக்குப் போக மீதியை ஏற்றுமதி செய்ய வேண்டும். விசைத்தறி தொழிலை பாதுகாக்க தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். நூல் விலையை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. கட்டும் நெசவு உற்பத்தியாளர்களுக்கு சலுகை விலையில் நூல் சப்ளை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 5 நாட்களுக்கு நெசவாளர்கள் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த உள்ளனர்.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 7 ஆயிரம் விசைத்தறிகள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சேலைகள் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிக்கு நெசவு வேலை செய்யும் நெசவாளர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.
    Next Story
    ×