search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லூரியில் மின்நூல் தொகுப்பு வெளியீட்டு விழா

    காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லூரியில் மின்நூல் தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது.
    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு பெண்கள் கலை கல்லூரியில் 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவையொட்டி கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை மற்றும் தியாகம் குறித்து உரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவிகள் பங்கேற்று சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினர். 75 நாட்கள் நடந்த இந்த உரையாடல் மின் தொகுப்பு வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. 

    கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். சுந்திர போராட்ட தியாகியும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான ஐ என் ஏ வில் பங்கேற்றவருமான சிவகாமி அம்மையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மின் தொகுப்பை வெளியீட்டு சுதந்திர போராட்டம் குறித்தும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஐஎன்ஏ படை தியாகம் குறித்து பேசினார். 

    தொடர்ந்து மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். துறைத் தலைவர்கள் செந்தில்குமார் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். வரலாற்றுத்துறை சசி குமார் நன்றி கூறினார்.
    Next Story
    ×