search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மொரப்பூர் அருகே விஷம் குடித்த கல்லூரி மாணவர் சாவு

    மொரப்பூர் அருகே விஷம் குடித்த கல்லூரி மாணவர் பலியானார்.
    தருமபுரி,

    ஈரோடு மாவட்டம், அந்தியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகநாதன் (வயது19). தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகேயுள்ள பத்திரெட்டியூரில் உள்ள தனது தாத்தா தனபால் என்பவரது வீட்டில் தங்கியிருந்த லோகநாதன் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாண்டு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் விஷம் குடித்துவிட்டு லோகநாதன் மயங்கி கிடந்தார். 

    இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×