search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X
    ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    கோவை சிங்காநல்லூரில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு அகற்றம்

    ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.
    கோவை:
     
    கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்திலிருந்து அவிநாசி ரோட்டுக்கு காமராஜர் சாலை செல்கிறது. இந்த சாலைகளில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருந்தன. 
     
    இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனையடுத்து கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். 

    இதனையடுத்து நேற்று நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் மாதேஸ்வரன் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர்கள் ஆறுமுகம், பசும்பொன் மற்றும்  மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் சாலைகளின் இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள், தள்ளுவண்டி கடைகள், நடைபாதையில் உள்ள கடைகள் ஆகியவற்றை இடித்து அகற்றினர். 

    இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சாலை சிறிது தூரம் 4 வழி சாலையாக உள்ளது. மீதமுள்ள 10 மீட்டர் அகலத்தில் இருவழி சாலையாக உள்ளது. இரு புறங்களிலும் தள்ளுவண்டி கடைகள், நடைபாதை ஆக்கிரமிப்பு ஆகியவை அதிகமாக உள்ளது. எனவே இதனை அகற்றும் பணி நடந்து வருகிறது  என்றனர்.
    Next Story
    ×