என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சட்டசபை மதிப்பீட்டுக் குழு கோவையில் அதிரடி ஆய்வு
கோவை,
தமிழ்நாடு சட்டசபை மதிப்பீட்டுக் குழு இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை உள்ளிட்ட துறைகளின் பணிகளை கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டனர்.
அதன் படி தமிழ்நாடு சட்டசபை மதிப்பீட்டுக் குழு ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள், அரசு சார்பாக மேற்கொண்ட பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
மக்கள் அவர்களிடம் காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றனர். பின்னர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மண்புழு மூலம் உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டனர். அதை தொடர்ந்து தடாகம் சாலையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டனர்.
இந்த ஆய்வில் தமிழ்நாடு சட்டசபை மதிப்பீட்டுக் குழு உறுப்பினரும், எம்.ஏல்.ஏ.க்களுமான, டி.ஆர்.பி ராஜா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அம்மன் கே.அர்ச்சுனன், ஈஸ்வரன், அருள், அன்பழகன், ராமச்சந்திரன், எழிலரசன், சதன் திருமலைக்குமார், சிவக்குமார், பாலசுப்ரமணியன், ராஜ்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மற்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றி செல்வன், கலெக்டர் சமீரன், மாநகராட்சி துணை கமிஷனர் சர்மிளா, கவுன்சிலர்கள் அழகு ஜெயபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X