என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி புதுப்பெண் பலி
Byமாலை மலர்24 May 2022 11:01 AM GMT (Updated: 24 May 2022 11:01 AM GMT)
கிருஷ்ணகிரி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி புதுப்பெண் பலியானார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகேயுள்ள வீரமலையை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சங்கீத (வயது24). கணவன், மனைவி இருவரும் மோட்டார்சைக்கிளில் காவேரிப்பட்டினம் வந்தனர். பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
சீகன்கொட்டாய் அருகே முன்னால் சென்ற அரசு பஸ்சை வேலு முந்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சங்கீதா ரோட்டில் விழுந்தார். இதில் அவர் மீது பஸ்சின் சக்கரம் ஏறி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சங்கீதா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இறந்து போன சங்கீதாவுக்கு திருமணமாகி 6 மாதங்கள்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி செய்திகள்,
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X