search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் சந்தையில் இன்று விற்பனைக்காக குவிந்த ஆடுகள்.
    X
    மேலப்பாளையம் சந்தையில் இன்று விற்பனைக்காக குவிந்த ஆடுகள்.

    தொடர் திருவிழாக்ககளால் மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

    தொடர் திருவிழாக்கள் எதிரொலியாக மேலப்பாளையம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
    நெல்லை:

    தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் மேலப்பாளை யம் சந்தையும் ஒன்றாகும்.

    இந்த சந்தையில் ஆடு களுடன் மாடுகள், கோழிகள், கருவாடுகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் மேலப்பாளை யம் கால்நடை சந்தைக்கு தென் மாவட்டத்தை சேர்ந்த வர்களும், கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும் வருவார்கள்.

    இதற்காக ஆயிரக்கணக்கான ஆடு களும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகும் ஆட்டுச்சந்தையில் பண்டிகை மற்றும் கோவில் திருவிழா நாட்களில் மேலும் அதிகமாக விற்பனை செய்யப்படும்.

    தற்போது திருவிழா காலம் என்பதால் கோவில் கொடை விழாக்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடுகள் பலி கொடுத்து வழிபடுவது வழக்கம். இதற்காக இன்று ஏராளமான ஆடுகள்  மேலப்பாளையம் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    இன்று ஒரே நாளில் ஆடுகள், கோழிகள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வந்தது. இதனை ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
    இதனால் இன்று மேலப்பாளையம் சந்தை களை கட்டி காணப்பட்டது.
    Next Story
    ×