search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகாம்
    X
    முகாம்

    மதுரை தெற்கு மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது

    மதுரை தெற்கு மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளரிடமும், அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி ஆணையாளர்களிடமும் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர். மேலும் மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. 

    அதன்படி நாளை  (செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள  மாநகராட்சி தெற்கு மண்டலம் 4 அலுவலகத்தில் காலை 10  மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி, ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. 

    தெற்கு  மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளான வார்டு எண்.29, செல்லூர், வார்டு எண்.30 ஆழ்வார்புரம், வார்டு எண்.41 ஐராவதநல்லூர், வார்டு எண்.42 காமராஜர் சாலை, வார்டு எண்.43 பங்கஜம் காலனி, வார்டு எண்.44 சேர்மன் முத்துராமய்யர் ரோடு, வார்டு எண்.45 காமராஜர்புரம், வார்டு எண்.46 பழைய குயவர்பாளையம், வார்டு எண்.47 சின்னக்கடை தெரு, வார்டு எண்.48 லட்சுமிபுரம், வார்டு எண்.49 காயிதேமில்லத் நகர், வார்டு எண்.53 செட்டியூரணி, வார்டு எண்.85 கீழவெளிவீதி, வார்டு எண்.86 கீரைத்துறை, வார்டு எண்.87 வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வார்டு எண்.88 அனுப்பானடி, வார்டு எண்.89 சிந்தாமணி, வார்டு எண்.90 கதிர்வேல் நகர் ஆகிய வார்டுகளின் பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு  குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில் வரி உள்ளிட்ட  கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.
    Next Story
    ×