search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜீவ் காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
    X
    ராஜீவ் காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரியில் ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைபிடிப்பு

    கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. 

    இதையொட்டி கிருஷ்ண கிரி பழையபேட்டை காந்தி சிலை முன்பு ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் சேகர் தலைமை தாங்கி, ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை மாவட்டத் தலைவர் கமலகண்ணன், மாவட்ட பொது செயலாளர் ஹரி, ஜெயசீலன், துணைத்தலைவர் மணி, கவுன்சிலர் விநாயகம், முன்னாள் நகர தலைவர் ரமேஷ் அர்னால்டு, வழக்கறிஞர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×