search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் தந்தை பெரியார் என்ஜினியரிங் கல்லூரி குரூப்-2 தேர்வு மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்.
    X
    வேலூர் தந்தை பெரியார் என்ஜினியரிங் கல்லூரி குரூப்-2 தேர்வு மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்.

    வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்- 2 தேர்வை 17,584 பேர் எழுதினர்

    டி.என்.பி.எஸ்.சி குரூப்- 2 தேர்வை 17,584 பேர் எழுதினர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 இன்று காலை தொடங்கியது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (நேர்முக தேர்வு பதவிகள் மற்றும் நேர்முக தேர்வு அல்லாத பதவிகள், குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம் ஆகிய 2 தேர்வு மையங்களில் பள்ளி, கல்லூரிகள் என்று மொத்தம் 77 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடந்தது. வேலூர் தேர்வு மையத்தில் 15,612 பேர், குடியாத்தம் தேர்வு மையத்தில் 5,246 பேர் என்று மொத்தம் வேலூர் மாவட்டத்தில் 20,858 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 17,584 பேர் தேர்வு எழுதினர். 3,2 71 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 77 முதன்மை கண்காணிப்பாளர்களும், 1,000-க்கும் மேற்பட்ட அறை கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டனர். தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தேர்வு கூடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு, குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர், வாட்ச், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை தேர்வு கூடத்துக்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. தேர்வு கூடத்தில் கொரோனா தொற்று விதிகளை பின்பற்றி அனைவரும் முககவசம் அணிந்து வந்து இருந்தனர்.

    தேர்வு எழுத உள்ளவர்கள் தேர்வு மையத்திற்குள் 8-30 மணி முதல் 9 மணிக்குள் வரவேண்டும் எனவும் அதற்குமேல் வருபவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேர்வர்கள் 8 மணிக்குள் தேர்வு மையங்கள் முன்பாக குவிந்தனர். 

    இந்த நிலையில் காட்பாடி விருதம்பட்டில் தனியார் பள்ளியில் தேர்வு மையத்திற்கு முன்பாக தேர்வு எழுத வந்தவர்கள் காத்திருந்தனர். நீண்ட நேரம் அவர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்கப் படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள அலுவலர்களிடம் தேர்வு எழுத வந்தவர்கள் அறைக்குள் அனுமதிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

    இதையடுத்து அனைவரும் 9 மணிக்குள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டு தேர்வு எழுதினர். தேர்வு எழுத வந்தவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
    Next Story
    ×