search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகாம் நடைபெறவுள்ள கல்லூரி வளாகத்தில் ஏற்பாட்டு பணிகளை, ஓசூர் எம்.எல்.ஏ, மேயர் நேரில் ஆய்வு செய்தனர்.
    X
    முகாம் நடைபெறவுள்ள கல்லூரி வளாகத்தில் ஏற்பாட்டு பணிகளை, ஓசூர் எம்.எல்.ஏ, மேயர் நேரில் ஆய்வு செய்தனர்.

    ஓசூரில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

    ஓசூரில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.
    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை, நாளை  (ஞாயிற்றுக்கிழமை) ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

    இதையொட்டி, முகாம் நடைபெறவுள்ள கல்லூரி வளாகத்தில் ஏற்பாட்டு பணிகளை, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    பின்னர், அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-
    இந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்தும் தனியார் நிறுவனங்கள் பங்குகொள்கின்றன. 

    இதில், 5 முதல் பட்டப்படிப்பு வரை படித்த மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும். முகாமில், 10,000 முதல் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 

    இந்த முகாமினை,   தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருக்கு தனது கரங்களால் பணி நியமன ஆணையை வழங்குகிறார். 

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கு மாவட்ட மற்றும் ஓசூர் மாநகர தி.மு.க சார்பில் செய்யப்பட்டுள்ளது. மாணவ மாணவியர் முகாமில் கலந்து கொள்வதற்கு வசதியாக, அனைத்து ஒன்றியங்களிலிருந்தும் மற்றும் பஸ் நிலையங்களிலிருந்தும், சிறப்பு பஸ் மற்றும் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. 

    ஓசூரில் நடைபெறும் இந்த மெகா வேலைவாய்ப்பு முகாம், முன்மாதிரியாக இருந்தது என்று உதயநிதி ஸ்டாலினிடம் பாராட்டு பெறும் வகையில், அனைவரது ஒத்துழைப்புடனும் முகாமினை மிக சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 
    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். 

    இந்த ஆய்வின்போது, ஓசூர் மாநகர தி.மு.க. பொறுப் பாளரும்,மேயருமான எஸ்.ஏ.சத்யா, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், வேப்பனபள்ளி முன்னாள் எம்.எல்.ஏ.பி.முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், மற்றும்  கட்சியினர், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×