search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    file photo
    X
    file photo

    முகாம் சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்

    முகாம் சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் இலங்கை, வங்காளதேசம், ரஷ்யா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த  குற்றவழக்குளில் தொடர்புடைய அகதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இலங்கை அகதிகள் 10 பேர் தங்களை சிறையில் அடைத்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாலும், தண்டனை காலம் முடிவடைந்து விட்டதாலும் தங்களை விடுதலை செய்யக்கோரி சிறை வளாகத்தில் நேற்று மதியம் முதல் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட உணவையும் அவர்கள் சாப்பிட மறுத்துவிட்டனர். இது பற்றி தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் முகாம் சிறையில் பரபரப்ப ஏற்பட்டது.


    Next Story
    ×