என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தீக்குளித்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்19 May 2022 10:16 AM GMT (Updated: 19 May 2022 10:16 AM GMT)
சித்தோடு அருகே தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்தோடு:
சித்தோடு அருகே தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்தோடு அருகே உள்ள சாணார்பாளையம் ஆதிதிராவிடர் வீதியை சேர்ந்தவர் கனகராஜ் (55). இவரது மனைவி வெண்ணிலா. இவர் ஊத்துக்காடு அங்கன்வாடி மையத்தில் சமையல் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் கனகராஜ் கடந்த சில காலமாக நோயால் அவதிப்பட்டு எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கனகராஜ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று தனக்கு தானே உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று உடல் கருகிய நிலையில் இருந்த கனகராஜ் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X