search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மேலசங்கரன்குழியில் ஆசிரியையிடம் நகை பறிப்பு

    மேலசங்கரன்குழியில் ஆசிரியையிடம் நகை பறிப்பு - இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர் கைவரிசை
    கன்னியாகுமரி:

    மேல சங்கரன்குழியில் வசித்து வருபவர் சதாசிவம். இவரது மனைவி பிரியா (வயது 40). இவர் கணபதி புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி  வருகிறார். ஆசிரியை நேற்று பள்ளிக்கு சென்று மாலை 5.30 மணி அளவில் வீட்டிற்கு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

    கோதவிளை எனும் இடத்தில் வரும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து வந்த கொள்ளையர்கள் 2 பேர்  பிரியா கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை அறுத்தனர். அப்போது நிலை தடுமாறி பிரியா ஸ்கூட்டரில் இருந்து கீழே  விழுந்தார். 

    கொள்ளையர்கள் கையில் இரண்டரை பவுன் செயின் சிக்கியது. மீதி பகுதி செயின் தரையில் விழுந்ததை நிலை தடுமாறி விழுந்த பிரியா எடுத்தார். படுகாயங்களுடன் கிடந்த  அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  

    சம்பவம் குறித்து ஆசிரியை பிரியா கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்க மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் காந்திமதி மேல் விசாரணை செய்து வருகிறார்.
    Next Story
    ×