search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
     கரூர்:

    கடுமையான நூல் விலை உயர்வைத் தடுத்து நிறுத்தவும், ஜவுளி தொழிலை பாதுகாக்க கோரியும், பருத்தியை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கவேண்டும், பஞ்சு நூல் ஏற்றுமதியை தடை செய்யவேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் 

    கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஜோதிபாசு தலைமையில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு ஜி.ஜீவானந்தம், கந்தசாமி, சி.ஆர்.ராஜாமுகமது, 

    கரூர் மாநகர செயலாளர் எம்.தண்டபாணி, ஒன்றியச் செயலாளர்கள் (கரூர்) எம்.ராஜேந்திரன், (கிருஷ்ணராயபுரம்) ஜி.தர்மலிங்கம், (க.பரமத்தி) ஏ.ஆர்.ராமசாமி, மாவட்டக்குழு கே.வி.கணேசன், ஆர்.ஹோச்சுமின் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×