search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் மீது மின்கம்பம் சாய்ந்து நிற்கும் காட்சி.
    X
    அரசு பஸ் மீது மின்கம்பம் சாய்ந்து நிற்கும் காட்சி.

    ஏரியூரில் அரசு பேருந்து மீது மின்கம்பம் சாய்ந்தது

    ஏரியூரில் அரசு பேருந்து மீது மின்கம்பம் சாய்ந்தது.
    பெரும்பாலை, 

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மேச்சேரியில் இருந்து பழையூர் வழியாக நாகமரைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஏரியூர் நாகமரை பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக மின்கம்பம் அரசு பஸ் மீது சாய்ந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். 

    இதுகுறித்து ஏரியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீர் மின் கம்பம் பஸ் மீது விழுந்ததால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
    Next Story
    ×