search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல் குவாரி விபத்து
    X
    கல் குவாரி விபத்து

    நெல்லை அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து - 3 பேர் பலி என தகவல்

    நெல்லை பொன்னாக்குடி அருகே கல் குவாரியில் பாறை சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    நெல்லை:

    நெல்லை பொன்னாக்குடி அருகே கல் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் நேற்று குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    இதற்கிடையே, நேற்று இரவு கல் குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், கல்குவாரி விபத்தில் 3 பேர் பலியாகினர் என மீட்கப்பட்ட தொழிலாளி கூறியதாக தகவல் வெளியானது.

    மேலும், கல்குவாரியில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். கல்குவாரியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர், ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×