என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முன்னாள் படை வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
Byமாலை மலர்13 May 2022 9:18 AM GMT (Updated: 13 May 2022 9:18 AM GMT)
முன்னாள் படை வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கரூர் :
கரூர் மாவட்ட முன்னாள் படைவீரர், அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் ககெல்டர் பேசியததவது,
கூட்டத்தில் 126 முன்னாள் படை வீரர்கள், அவர்களைச் சார்ந்தோர்கள் கலந்துகொண்டனர். மேலும், 32 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றதையொட்டி அம்மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு கோரிக்கை மனு மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முன்னாள் படைவீரர் நலன் கொடிநாள் நிதி கடந்தாண்டு இலக்கை விட அதிக அளவில் சேகரிக்கப்பட்டது.
அதேபோல் கடந்தாண்டை விட நிகழாண்டு அதிகளவில் உங்களுக்கான நிதி சேகரிக்கப்படும் என்றார். முன்னதாக, 9 முன்னாள் படைவீரர்களுக்கு கல்வி உதவித்தொகை, வங்கி கடன் வட்டி மானியம், மாதாந்திர நிதியுதவி, கண் கண்ணாடி நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி என ரூ.1,29,392 வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ம.லியாகத், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ஓய்வு லெப்.கர்னல் ஞானசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X