search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    file photo
    X
    file photo

    முசிறி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க கோரி மனு

    முசிறி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க கோரி மனு
    திருச்சி:

    முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன், காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார், அதில்  முசிறி, துறையூர், உப்புலியபுரம், தாப்பேட்டை, தொட்டியம், காட்டுப்புத்தூர், ஆகிய பகுதி  கிராமங்களில் திருட்டுத்தனமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது.

    இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மது பழக்கத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இதனால் அவர்கள் குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு காவல்நிலையம் வரை செல்ல வேண்டியுள்ளது.

    மேலும் உயிரிழப்புகளும் நேரிடுகிறது. எனவே திருட்டுத்தனமாக நடைபெறும் மது விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.

    Next Story
    ×