search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    மழையால் அழுகிய தக்காளி பழங்கள் விவசாயிகள் கவலை

    திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    கடந்த சில தினங்களாக, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை,பல்லடம், தாராபுரம் வட்டாரத்தில் பெய்த மழை காரணமாக, விவசாயிகள் பயிரிட்டு இருந்த தக்காளி செடிகள் சேதமடைந்துள்ளன.

    இதுகுறித்து பல்லடம் பகுதியை சேர்ந்த விவசாயி மயில்சாமி கூறியதாவது:-

    கடந்த மாதம், கிலோ 10 ரூபாய்க்கும் கீழ் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டது. 

    தற்போது மீண்டும் விலை அதிகரித்து வரும் சூழலில், நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்து தக்காளி பயிரிட்டேன். இதற்கிடையே, சமீப நாட்களாக பெய்த திடீர் மழையால் தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. காய்கள் அழுகி உற்பத்தி குறைந்துள்ளது. பறிப்புக்கு தயாராக இருந்த தக்காளிகளும் மழையால் சேதமடைந்துள்ளன. 

    விளைச்சல் நன்றாக இருந்தால் ஏக்கருக்கு 20 டன் வரை உற்பத்திகிடைக்கும். மழை பாதிப்பு காரணமாக 3 நாட்களுக்கு ஒருமுறை, 3 டிப்பர் மட்டுமே கிடைக்கிறது. 14 கிலோ கொண்ட டிப்பர் ஒன்று 500 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகிறது. மழை காரணமாக தக்காளி அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×