search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் அரிசி பறிமுதல்
    X
    ரேசன் அரிசி பறிமுதல்

    களியக்காவிளை அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 1700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    களியக்காவிளை அருகே சொகுசு காரிலும் இருசக்கர வாகனத்திலும் கேரளாவிற்கு கடத்த முயன்ற 1700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் : களியக்காவிளை போலீசார் அதிரடி
    கன்னியாகுமரி:

    தமிழக கேரள எல்லைப்பகுதி வழியாக  தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்ணெண்ணை கடத்துவது தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை களியக்காவிளை உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார்  ஒன்று வந்துக்கொண்டிருந்தது.  அந்த காரை நிறுத்து மாறு சைகை காட்டினர் உடனே ஓட்டுநர் காரை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்தபோது காரில் 1.5 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கபட்டது. அதை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.மேலும் அது வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை சோதனை செய்த போது அதில் 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கபட்டது. அதுவும் கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
     
    இதை தொடர்ந்து கடத்தல் வாகனங்களையும் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்ப டைக்க பட்டது. அவர்கள் கடத்தல்  அரிசியை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாகனங்களை வட்டாட்சி யர் அலுவலகத்திலும் ஒப்ப டைக்கப்பட்டது. தொடர்ந்து தப்பி ஓடிய டிரைவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×