search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஜோலார்பேட்டை ரெயிலில் 100 கிலோ குட்கா பறிமுதல்

    ஜோலார்பேட்டை ரெயிலில் 100 கிலோ குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிைலயத்தில் ரெயில்வே போலீசார் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் போதை பொருட்கள் கடத்துப்படுகிறதா என சோதனை நடத்தினர். 

    அப்போது 5 வது பிளாட்பாரத்தில் வந்து நின்ற மைசூர் - சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் சோதனை செய்தனர். 

    அப்போது முன்பதிவு இல்லாத பயணிகள் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்குகளில் சோதனை செய்த போது அதில் 100 கிலோ பான் மசாலா, குட்கா ஆகியவை இருந்ததை கைப்பற்றினர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×