search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொள்ளாச்சியில் பலத்த மழை

    திடீரென கொட்டி தீர்த்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.
    ெபாள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் நிலவி வந்தது. நேற்று மாலை முதல் பொள்ளாச்சி பகுதியில் சாரல் மழை பெய்தது. பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. 

    இந்த மழையால் பொள்ளாச்சி பஸ் நிலைய சாலை, பல்லடம் சாலை, உடுமலை சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். திடீரென கொட்டி தீர்த்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. பொள்ளாச்சியில் மட்டும் 49 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×