search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் பீடிக்கு தீப்பற்ற வைத்த 13 வயது சிறுவன் பலி

    பெட்ரோல் கொட்டியதை மறந்த சிறுவர்கள் சிறிது நேரத்துக்கு பின்னர் பீடி குடிப்பதற்காக தீ பற்ற வைத்தனர்.
    கோவை:

    கோவை ராமநாதபுரம் அருகே உள்ள நடராஜ் தேவர் காலனியை சேர்ந்தவர் ராஜன். பிளம்பர். இவரது மகன் கவுதம் (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். 

    சம்பவத்தன்று கவுதம் தனது நண்பர்கள்  2 பேருடன்  ஸ்ரீபதி நகரில் உள்ள கார் ஓர்ஷாப் அருகே விளையாடிக்கொண்டு இருந்தார். 

    அப்போது இவரது நண்பர்கள் பெட்ரோலை முகர்ந்தால் போதை ஏறும் என கவுதமிடம் கூறினார். இதனையடுத்து அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு பாட்டிலில் பெட்ரோலை பிடித்தனர். பின்னர் காருக்குகள் ஏறி மறைத்து கொண்டு பெட்ரோலை முகர்ந்தனர். அப்போது அவர்களது ஆடையில் பெட்ரோல் கொட்டியது. 

    பெட்ரோல் கொட்டியதை மறந்த சிறுவர்கள் சிறிது நேரத்துக்கு பின்னர் பீடி குடிப்பதற்காக தீ பற்ற வைத்தனர். அப்போது கவுதமின் உடலில் தீ பிடித்தது. இதனை பார்த்த அவரது நண்பர்கள் அங்கு இருந்து ஓட்டம் பிடித்து விட்டனர். கண்இமைக்கும் நேரத்தில் கவுதமின் உடல் முழுவதும் தீ பரவியது.

     இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைத்து சென்று கவுதமை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.  

    சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கவுதமுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் மீண்டும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று கவுதம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செ்ய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    Next Story
    ×