search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் சங்க மாநில கூட்டம்
    X
    அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் சங்க மாநில கூட்டம்

    அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் சங்க மாநில கூட்டம்

    சாக்கோட்டையில் அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் சங்க மாநில கூட்டம் நடைபெற்றது.
    நீடாமங்கலம்:

    நாச்சியார் கோயிலை அடுத்துள்ள சாக்கோட்டையில் அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் (மற்றும்) உதவியாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றது.

    சாக்கோட்டையில் உள்ள பெரியார் நகர் சமுதாய அரங்கில் மாநில அளவிலான அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றது இதில் மாநில தலைவர் சாந்தா, மாநில பொதுச் செயலாளர் பானு, பொருளாளர் மீனாட்சி, தஞ்சை மாவட்ட தலைவர் வாசுகி, துணை தலைவர் இராஜாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அங்கன்வாடியில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கோடைக்கால விடுமுறை வேண்டும். பகுதிநேர பணியாளர்களை, பணி வரன்முறை செய்து அரசாணை வழங்கப்பட வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்நிகழ்வில் தஞ்சை, திருவாரூர்,நாகை உட்பட எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் முன்னூறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×