என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் சங்க மாநில கூட்டம்
Byமாலை மலர்8 May 2022 9:28 AM GMT (Updated: 8 May 2022 9:28 AM GMT)
சாக்கோட்டையில் அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் சங்க மாநில கூட்டம் நடைபெற்றது.
நீடாமங்கலம்:
நாச்சியார் கோயிலை அடுத்துள்ள சாக்கோட்டையில் அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் (மற்றும்) உதவியாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றது.
சாக்கோட்டையில் உள்ள பெரியார் நகர் சமுதாய அரங்கில் மாநில அளவிலான அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றது இதில் மாநில தலைவர் சாந்தா, மாநில பொதுச் செயலாளர் பானு, பொருளாளர் மீனாட்சி, தஞ்சை மாவட்ட தலைவர் வாசுகி, துணை தலைவர் இராஜாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அங்கன்வாடியில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கோடைக்கால விடுமுறை வேண்டும். பகுதிநேர பணியாளர்களை, பணி வரன்முறை செய்து அரசாணை வழங்கப்பட வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் தஞ்சை, திருவாரூர்,நாகை உட்பட எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் முன்னூறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X