search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆம்பூரில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

    ஆம்பூரில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    ஆம்பூர்,

    ஆம்பூர் டவுன் எஸ்.கே. ரோடு பகுதியை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 55) ஓட்டல் தொழிலாளியான அவர் ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் வேலை பார்த்துக்கொண்டு தனியாக வசித்துக் கொண்டு வந்தார்.

    அவரின் மனைவி பிள்ளைகள் வேறு இடத்தில் வசித்து வருகின்றனர். கங்காதரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டி்ன் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அவரின் குடும்பத்தினர் எஸ்.கே. ரோடு பகுதியில் உள்ள அவரின் வீட்டுக்கு வந்தனர். வீட்டின்  உள் தாழ்பாள் போடப்பட்டிருந்தது. 

    ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது கங்காதரன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குடும்பத்தினர் ஆம்பூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கங்காதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×