search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

    தருமபுரியில் இரு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் நல சங்கம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    தருமபுரி,

    தருமபுரியில் மாவட்ட இரு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர்கள் நல சங்கம் சார்பில், 15-ம் ஆண்டு விழா மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னதாக தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை  தருமபுரி டவுன் இன்ஸ்பெக்டர் நவாஷ் துவக்கி வைத்தார்.  

    பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு துவங்கிய இந்த விழிப்புணர்வு  பேரணி தருமபுரி  முக்கிய வீதிகள் வழியாக  சென்று தருமபுரி நான்கு ரோட்டில் முடிவடைந்தது. 

    இந்த பேரணியில்  தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி சால்வை அணிவித்து பாராட்டினார். 

     விழிப்புணர்வு பேரணியில்  போலீசார் மற்றும்  இருசக்கர மோட்டார் பழுதுபார்ப்பவர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×