என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » helmet awareness rally
நீங்கள் தேடியது "Helmet awareness rally"
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில், கூட்டு ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரி அசோகன், துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி ஆகியோர் தலைமை தாங்கி, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
இதில், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகராஜன், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஹெல்மெட் அணிந்தவாறு இரு சக்கர வாகனங்களில் சென்றனர். இந்த ஊர்வலம் ஓசூரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று, ஆர்.வி. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இந்த நிலையில் வாகன பதிவு மற்றும் லைசென்ஸ் பெற போக்குவரத்து அலுவலத்திற்கு வந்தவர்களை, இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள அலுவலர்கள் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால், அரசு மானிய விலையில் மொபட் வாங்கிய பெண்கள் சிலர் கைக்குழந்தையுடன் வாகன பதிவிற்கு வந்தபோது காத்திருக்க நேரிட்டது. இதன் காரணமாக அவர்கள் சிரமம் அடைந்தனர். மேலும், தனியார் கம்பெனிகளில் அனுமதி பெற்று வாகன பதிவிற்காக வந்த தொழிலாளர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில், கூட்டு ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரி அசோகன், துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி ஆகியோர் தலைமை தாங்கி, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
இதில், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகராஜன், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஹெல்மெட் அணிந்தவாறு இரு சக்கர வாகனங்களில் சென்றனர். இந்த ஊர்வலம் ஓசூரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று, ஆர்.வி. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இந்த நிலையில் வாகன பதிவு மற்றும் லைசென்ஸ் பெற போக்குவரத்து அலுவலத்திற்கு வந்தவர்களை, இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள அலுவலர்கள் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால், அரசு மானிய விலையில் மொபட் வாங்கிய பெண்கள் சிலர் கைக்குழந்தையுடன் வாகன பதிவிற்கு வந்தபோது காத்திருக்க நேரிட்டது. இதன் காரணமாக அவர்கள் சிரமம் அடைந்தனர். மேலும், தனியார் கம்பெனிகளில் அனுமதி பெற்று வாகன பதிவிற்காக வந்த தொழிலாளர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
ஆட்டையாம்பட்டியில் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனங்கள் ஓட்ட வேண்டும் என்றும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் போலீசார் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
ஆட்டையாம்பட்டி:
ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இருந்து பேரணியை இன்ஸ்பெக்டர் நடராஜன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்செங்கோடு ரோடு, ராசிபுரம் மெயின் ரோடு உள்பட முக்கிய வீதிகள் வழியாக ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்கள் மெக்கானிக்கல் போலீசாரும், சப்- இன்ஸ்பெக்டர்கள், வாகன ஓட்டிகளும் அணிவகுப்பில் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
ஆங்காங்கே பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X