search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    கல்வி விடுதிகளில் தூய்மை பணியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

    பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மை பணியாளர் இடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர  தூய்மை   பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 

    திருப்பூர் மாவட்டத்தில் பகுதி நேர  தூய்மை பணியாளர் ஆண் 7, பெண்   தூய்மை பணியாளர் 8 இடங்கள் காலியாக உள்ளன. 15 பகுதி நேர  தூய்மை பணியாளர் காலி பணியிடங்கள் நேர்காணல் மூலம் நிரப்பப்படுகிறது.

    தகுதியானது தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்கவேண்டும். வரும் ஜூலை 1 ல், எஸ்.சி.,எஸ்.டி., 18 முதல் 35 வயது, பி.சி., - பி.சி.எம்., - எம்.பி.சி., - டி.என்.சி., 18 முதல் 32 வயது, இதர பிரிவினர் 18 முதல் 30 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். அரசு விதிகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் பகுதி நேர தூய்மை பணியாளராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் இணைத்து திருப்பூர் கலெக்டர் அலுவலக அறை எண் 116 ல் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில்  வருகிற 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×