search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூமி பூஜையில் பங்கேற்றவர்கள்.
    X
    பூமி பூஜையில் பங்கேற்றவர்கள்.

    பாப்பான்குளம் ஊராட்சி பகுதியில் தார்சாலை அமைக்க பூமி பூஜை

    ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள தார்சாலை மிகவும் பழுதடைந்து இருந்தது.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் தாலுகா பாப்பான்குளம் ஊராட்சி பகுதியில் உள்ள கிலுவன் காட்டூர் சாலையும், ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள தார்சாலை மிகவும் பழுதடைந்து இருந்தது. இதை புதுப்பிக்கவும், குடிநீர் குழாய்கள் விஸ்தரிப்பு பணிகள் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்தக் கோரிக்கைகளை ஏற்ற அரசு தற்போது கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக உடுமலை - பழனி ரோட்டில் இருந்து கிழவன் காட்டூர் ரோடு வரை தார்சாலை அமைக்க ரூ. 48.50 லட்சமும், முக்கண்ணப்பர் கோவிலில் தொடங்கி ரெட்டியார்பாளையம் ரோடு வரை தார்சாலை அமைக்க பணிக்கு ரூ.20 லட்சமும், 15- வது நிதிக்குழு மானியம் மூலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள சம்ப் தொடங்கி பாப்பான்குளம் பிரிவு வரை குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிக்கு ரூ.8 லட்சமும் ஒதுக்கீடு செய்துள்ளது, இந்த பணிகளுக்கான பூமி பூஜை  நடந்தது. 

    இதில் மடத்துக்குளம் ஒன்றிய குழுத்தலைவர் காவியா, துணைத் தலைவர் ஈஸ்வரசாமி, மெட்ராத்தி ஊராட்சி தலைவர் தங்கராஜ், பாப்பான்குளம் ஊராட்சி தலைவர் நாச்சம்மாள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×