search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    தொட்டியத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது

    தொட்டியத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஏழூர்ப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு. கூலித் தொழிலாளியான இவரது  மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

    இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் தங்கராசு புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குண்டுமணிப்பட்டியை சேர்ந்த பொண்ணுமணி என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் பொண்ணுமணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×