என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பளுகல் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
Byமாலை மலர்7 May 2022 8:58 AM GMT (Updated: 7 May 2022 8:58 AM GMT)
பளுகல் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
களியக்காவிளை. மே.7-
பளுகல் அருகே பாக்கோட்டு கோணம் பத்திர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை மாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. மேலும் கோவில் புதுப்பிக்கும் பணியும் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை பூஜை முடிந்து கோவிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டுக்கு சென்றுள்ளார். காலையில் கோவிலுக்கு வந்து பார்த்த போது பாலாய பிரதீஷ்டை கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் செயலாளருக்கு தகவல் தெரிவித்தார்.
செயலாளர் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் உள்ளே இருந்த நகை மற்றும் அம்மனுக்கு அணிந்திருந்த நகை மற்றும் பொட்டை காணவில்லை அதனுடன் காணிக்கை பணம் ரூ.4,500யை காணவில்லை.
இது குறித்து செயலாளர் கோபால கிருஷ்ணன் பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X