search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    கட்டிடப் பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

    கட்டிடப் பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
    திருச்சி:

    முசிறி கட்டிட பொறியாளர் சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா தனியார் மண்டபத்தில் சாசன தலைவர் பொறியாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் சங்கத் தலைவராக பொறியாளார் பூபதி, துணைத் தலைவராக சதீஷ்குமார், செயலாளராக ராஜா ,துணைச் செயலாளராக அரவிந்த், பொருளாளராக தினேஷ் ஆகியோர் ஒருமனதாக நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

    விழாவில் மண்டலத் தலைவர் பொறியாளர் ரவி, துணைத் தலைவர் விஜயா பானு, மாநிலச் செயலாளர் குழந்தைவேலு, மாநில துணைத் தலைவர் சிவகுமார், முன்னாள் மாநில செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் மாநில இணைச் செயலாளர் சுகுமார் , முன்னாள்மண்டலத் தலைவர் சரவணன்,

    திருச்சி மண்டல தலைவர் மணிகண்டன் நல்லாசிரியர் சிவராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆலோசனைக் குழு, பொதுக்குழு , செயற்குழு, உறுப்பினர்கள் , ஆகியோர், ஏகமனதாக நியமனம் செய்யப்பட்டனர்.

    விழாவில் அறந்தாங்கி, பொன்னமராவதி, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், மணப்பாறை, குளித்தலை, துறையூர் ஆகிய பகுதிகளிலுள்ள சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் பொறியாளர் ராஜா அனைவருக்கும் நன்றி கூறினர்.
    Next Story
    ×