என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மண்டைக்காடு அருகே ஒரே பெண்ணை காதலித்ததில் மோதல் - 2 பேர் கைது
Byமாலை மலர்6 May 2022 9:59 AM GMT (Updated: 6 May 2022 9:59 AM GMT)
மண்டைக்காடு அருகே ஒரே பெண்ணை காதலித்ததில் மோதல் - 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே பள்ளி யாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஷைஜூ (வயது 20), சுண்டவிளையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (21), அழகன் பாறை காளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (23), நெய்யூரை சேர்ந்தவர் விஷ்ணு (22). கூலித்தொழிலாளர்களான இவர்கள் 4 பேரும் நெருங்கிய நண்பர்கள்.
இந்த நிலையில் பள்ளி யாடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒரு வருக்கும் ஷைஜூக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராம் மற்றும் போன் மூலம் காதலை வளர்த்து வந்தனர்.
இதுகுறித்து ஷைஜூ மற்ற நண்பரிடம் தெரி வித்துள்ளார். இந்த நிலையில் ஷைஜூ காதலித்த அதே இளம்பெண்ணை சதீசும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு பழகி காதலிக்க தொடங்கினார். இது தொடர்பாக ஷைஜூ மற்றும் சதீஷ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் ஷைஜூவை பழி வாங்க தீர்மானித்தார்.
இதற்காக மற்ற நண்பருடன் சேர்ந்து அவர் திட்டம் தீட்டினார். பின்னர் ஷைஜூவுடன் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில் முரசங்கோடு பகுதியை சேர்ந்த சஞ்சய், குழித்துறையைச் சேர்ந்த ராகுல் ஆகியோரும் கலந்து கொண்டனர். அனைவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அழகன்பாறை காளிவிளை பகுதிக்குச் சென்றனர்.
அங்கு வைத்து ஷைஜூக்கும் 5 பேருக் கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தான் காதலிக்கும் பெண்ணை ஷைஜூ மறந்துவிட வேண்டும். மீறி காத லித்தால் கொன்று விடு வோம் என அவர்கள் 5 பேரும் ஷைஜூவை மிரட்டியுள்ளனர். மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் சரமாரியாக அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தை நண்பர்களில் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது. இதை பார்த்த மண்டைக்காடு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்கள் ஷைஜூவிடம் புகார் மனுவை பெற்று 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் சதீஷ்குமார் மற்றும் ஆனந்தராஜை கைது செய்தனர். மற்ற 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X