search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வால்பாறையில் காவலாளி மீது தாக்குதல்

    காவலாளியை தாக்கிய அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை அக்காமலை 3-வது பிரிவை சேர்ந்தவர் ஜெயபால் (59). இவர் அங்குள்ள எஸ்டேட்டில் காவலாளியாக உள்ளார். 
     
    அதே பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (48). அரசு பஸ் டிரைவர். இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயபால்,  தர்மராஜின் வீட்டிற்கு சென்று தண்ணீர் வாங்கி குடித்தார்.

    அப்போது அங்கு வந்த தர்மராஜ், ஜெயபாலிடம் எதற்காக இங்கே வந்தாய், என் மனைவியிடம் நீ எதற்கு பேசி கொண்டு இருக்கிறாய் என கேட்டார்.  இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த தர்மராஜ், தனது தந்தை வீரபுத்திரனுடன் சேர்ந்து ஜெயபாலை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த மரகட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினர்.
     
    பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜெயபாலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து ஜெயபால் வால்பாறை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பஸ் டிரைவர் தர்மராஜை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அவரின் தந்தை வீரபுத்திரனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×