search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    என்.ஜி. ஓ. காலனி அருகே புகையிலை விற்றவர் கைது

    என்.ஜி. ஓ. காலனி அருகே புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கபரியேல் மற்றும் போலீசார் என்.ஜி.ஓ.காலனி அடுத்த ஒத்தக்கடை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருக்கும்போது அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் குஞ்சன் விளை ஒத்தக்கடை இறக்கத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அந்தக் கடையை சோதனை செய்ததில் 44 பாக்கெட் புகையிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    அதனை தொடர்ந்து அந்த கடை உரிமையாளர் சமுத்திர பாண்டி வயது 52 என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரனைசெய்து வருகின்றனர். மேலும் 44 பாக்கெட் புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×