search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புத்தளம் அருகே மது விற்ற 2 பேர் கைது

    புத்தளம் அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கபரியேல் மற்றும் போலீசார் புத்தளம் அருகே சேதுபதியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் தெங்கம்புதூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்த லிங்கம் (வயது 56) என்பதும்,

    பறக்கை அருகே உள்ள புல்லுவிளையை சேர்ந்த துரைசிங் (35)என்பதும் தெரியவந்தது. அவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள், மதுவிற்று வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.1200 பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×