என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திங்கள்நகர் பஸ் நிலையத்தில் காமராஜர் சிலை அமைக்க வேண்டும்
Byமாலை மலர்6 May 2022 7:42 AM GMT (Updated: 6 May 2022 7:42 AM GMT)
திங்கள்நகர் பஸ் நிலையத்தில் காமராஜர் சிலை அமைக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
கன்னியாகுமரி:
திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் சுமன் தலைமையில், செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் முன்னிலையில் நடந்தது.
பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் திங்கள் நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் பஸ் நிலையத்தில் காமராஜருக்கு சிலை அமைப்பது,
மழைநீர் ஓடைகளில் கலக்கும் கழிவுநீர் குழாய்களை 100 சதவீதம் அடைக்க நடவடிக்கை எடுப்பது, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 100 சதவீதம் இல்லை என்ற நிலையை உருவாக்குவது, 15 வார்டுகளிலும் பாகு பாடுகளின்றி வளர்ச்சி பணிகளை துரிதமாக மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணைத் தலைவர் சாந்தி என்ற ரீத்தம்மாள், கவுன்சிலர்கள் கவிதா, ஜெயசேகரன், முத்துக்குமரன், ஹேமா, சரவணன், சுகன்யா, சாந்தா, கவுதமி, சுஜாதா, ஜேக்கப், செல்வின் ஜார்ஜ், பீட்டர்தாஸ், தெரசம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X