search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    X
    போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கஞ்சா கடத்தி வந்த இளம்பெண் கைது: 50 கிலோ கஞ்சா பறிமுதல்

    போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நீலாம்பூர் 
    கோவை மாவட்டம்  சூலூர் காங்கயம்பாளையம் பகுதியில் தனிப்படை போலீசார் காலைரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் தூக்க முடியாத அளவில் கட்ட பைகளை எடுத்து கொண்டு தனியாக சென்று கொண்டு இருந்தார்.
    இதனை பார்த்த தனிப்படை போலீசார் பரிதாபப்பட்டு அந்தப் இளம்பெண்ணுக்கு உதவி செய்ய சென்றனர்.அந்த இளம்பெண் தனக்கு உதவி வேண்டாம் நான் பார்த்து கொள்கிறேன் என முன்னுக்கு பின் முரனாக பதிலளித்தார்.
    இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.  உடனே போலீசார் அந்த இளம்பெண்ணிடம்    அவர் வைத்திருந்து பைகளை காண்பிக்கும்படி கூறினர். ஆனால் அவர் அதற்கு மறுத்தார்.
    போலீசார் அவரிடமிருத்து பைகளை வாங்கி சோதனை செய்தனர். அப்போது  அதில் பண்டல்பண்டலாக கஞ்சா இருந்தது தெரியவந்தது.இதனை கண்டு போலீசார்  அதிர்ச்சி அடைந்தனர்.
    இதையடுத்து போலீசார்  அந்த இளம்பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசரணையில் அந்த இளம்பெண்  மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரது மனைவி ஜெய பாண்டியம்மாள் (வயது 30) என்பதும், இவர் தேனி, உசிலம்பட்டி பகுதிகளில் இருத்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து இங்கு உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய பாண்டியம்மாளிடம் இருந்த 50 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற
    Next Story
    ×