search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ேகாப்பு படம்
    X
    ேகாப்பு படம்

    பொள்ளாச்சி அருகே நகையை கொள்ளையடித்து விட்டு மோட்டார்சைக்கிளுடன் தப்பிய கொள்ளையர்

    போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    கோவை,மே.5-
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் அருணகிரி. இவரது மனைவி வெண்மதி (வயது 54).
     
     இவர் அந்த பகுதியில் கியாஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். 
    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு திருப்பூரில் வசித்து வரும் தனது மகனை பார்க்க சென்றார். வீட்டின் சாவியை குடும்ப நண்பரான ராஜ்குமார் என்பவரிடம் கொடுத்து விட்டு சென்றார். 
    ராஜ்குமார் தனது மோட்டார் சைக்கிளை வெண்மதியின்  வீட்டில்  நிறுத்தி விட்டு வெளியே சென்றார். அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே சென்றனர். 
     
    அவர்கள் அறையில் இருந்த பீேராவை திறந்து அதில் இருந்த சென்யின், டாலர், மோதிரம், வைர கம்மல், வைர மூக்குத்தி உள்பட 7Ñ பவுன் தங்க நகைகள் வெள்ளி குடம், தட்டு உள்பட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்த0னர். பின்னர் ராஜ்குமார் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். 
     
    மறுநாள் வீட்டிற்கு வந்த ராஜ்குமார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து வீட்டின் உரிமையாளர் வெண்மதிக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக விரைந்து வந்தது பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த 7Ñ பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.  இது குறித்து அவர் மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
     
     மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து மகாலிங்கபுரம் போலீ சார் வீட்டின் கதவை உடைடை நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கொள்ளை யர்களை தேடி வருகிறார்கள்.  

    Next Story
    ×