search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

    திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமாகினர்.
    திருச்சி:

    திருச்சி இ.புதூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது69) இவரது மனைவி விஜயலட்சுமி (59) இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அன்பழகன் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மூதாட்டியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் திருச்சி தென்னூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50) இவரது மகள் ராகவி (24) திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.  

    அதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று ராகவி கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகில் உள்ள தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

     புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×