என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Byமாலை மலர்5 May 2022 9:44 AM GMT (Updated: 5 May 2022 9:44 AM GMT)
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் கடைகள் அமைக்கக்கூடாது என்று மேயர் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைக்கக்கூடாது என்றும் கடைக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் பல்வேறு கடைக்கா ரர்கள் பஸ் நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளனர்.
கடை விளம்பர பலகைகளும் நடைபாதையிலேயே வைக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை அண்ணா பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பல்வேறு கடைக்காரர்கள் நடை பாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நடைபாதை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
அந்த வகையில் மொத்தம் 15 கடைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட கடைக்காரர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X