search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ேகாப்பு படம்
    X
    ேகாப்பு படம்

    கோவை மாவட்டத்தில் வரும் 8-ந் தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

    கலெக்டர் சமீரன் தகவல் தெரிவித்துள்ளார்.
    கோவை, 
     கோவை மாவட்டத்தில் வரும் 8-ந்தேதி 29-வது மெகா கொரோனா  தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட செய்தி குறியிப்பில் கூறியிருப்பதாவது:-
     
    தமிழகத்தில் கொரோனா பெருந் தொற்றின் 4-வது அலை பரவ அதிக வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் தொற்றில் இருந்து தங்களை தற்காத்து ெகாள்ள ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 
    அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் வரும் 8-ந் தேதி சிறப்பு மாபெரும் 29-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். 
    மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமபுறங்களில் 2,505 தடுப்பூசி முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 950 முகாம்களும், நகராட்சி பகுதிகளில் 224 முகாம்கள் என மொத்தம் 3,679 இடங்களில் இந்த முகாம் நடைபெறும். 
     
    இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தவறாமல் இந்த 29-வது கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு 4-வது அலை தொற்றில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும். மேலும் முகாம் நடைபெறும் இடங்களை பொதுமக்கள் மாவட்ட இணையதளம் coimbatore.nic.in அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×