search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு இலவச செல்போன் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சூரியகுமார் வழங்கினார்.
    X
    தூய்மை பணியாளர்களுக்கு இலவச செல்போன் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சூரியகுமார் வழங்கினார்.

    அம்பலூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச செல்போன்

    அம்பலூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்பட்டது.
    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் முதல்-அமைச்சர் ஆணைக்கினங்க, ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் தலைமையில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் கலந்து கொண்டு, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கிவைத்தார். 

    மேலும் தூய்மைப் பணியாளர்களை, பொது மக்களும் அதிகாரிகளும் விரைந்து தொடர்புகொண்டு, ஊராட்சி முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொருட்டு, ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு செல்போன்களை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணிசாமுடி, ஆசிரியர் சாமண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×