என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருமணமாக இருந்த நிலையில் பாம்பு கடித்து வாலிபர் சாவு
Byமாலை மலர்5 May 2022 7:59 AM GMT (Updated: 5 May 2022 7:59 AM GMT)
குடவாசலில் அடுத்த மாதம் திருமணமாக இருந்த நிலையில் பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்தார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வடக்கு தெருவை சேர்ந்த் நீலமோகன் மகன் மோகன்ராஜ் (வயது26). இவர் தனியார் நிறுவனத்தில்வி ற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.
இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் நிச்சயம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள கீற்று கொட்டகையில் அமர்ந்திருந்த போது நல்ல பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. உடன் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண கனவுடன் இருந்த இளைஞர், பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X