search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்துக்குள்ளான கார்.
    X
    விபத்துக்குள்ளான கார்.

    கோவிலில் உள்ள சாமி சிலைகள் மீது கார் மோதல்- பெண் பலி

    ஆம்பூர் அருகே கோவிலில் உள்ள சாமி சிலைகள் மீது கார் மோதி– பெண் பலியானார்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே வீரவர்கோவில் என்ற இடத்தில் இன்று காலை 9 மணிக்கு வேலூர் இருந்து ஆம்பூருக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அப்போது தீடிரென கார் கோவில் உள்ள பகுதியில் புகுந்து சாமி சிலைகள் மீது மோதியது. இதில் காரில் இருந்த  ஒரு பெண் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

    படுகாயமடைந்த 2 சிறுவர்கள் மற்றும் ஒருவர் உள்பட 3 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×