search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்திலி வேளாண்மை உதவி இயக்குனர் ராகினியிடம் கடன் அட்டை பெற விவசாயிகள் மனு அளித்தனர்.
    X
    கந்திலி வேளாண்மை உதவி இயக்குனர் ராகினியிடம் கடன் அட்டை பெற விவசாயிகள் மனு அளித்தனர்.

    திருப்பத்தூர் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

    திருப்பத்தூர் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மிக எளிதாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை வங்கிகள் மூலம் விவசாய கடன் தொகை பெற விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்திலும், ஆதியூர் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தி்லும் நடைபெற்றது.
     
    வேளாண்மை துறை இணை இயக்குனர் ராஜசேகர், உதவி இயக்குனர் ராகினி, உதவி அலுவலர் ஸ்வஸ்திகா, விவசாயிகளிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார், முகாமில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் விவசாயிகளிடம் மனுக்கள் பெற்று எழுதி கொடுப்பதிலும் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் வாங்குவதற்கு விவசாயிகளிடம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

    முகாமில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர் கலந்து கொண்டு விவசாய கடன் அட்டை பெறுவதற்கு தேவையான அடங்கல்களை உடனடியாக முகாம் நடைபெற்ற இடத்திலேயே வழங்கினார், இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.முகாமில் வங்கி மேலாளர்கள், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×